என் மலர்
செய்திகள்

புதுச்சேரி
புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு
புதுச்சேரியில் உணவகங்கள் இரவு 9 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் 10 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
புதுவை:
புதுவையில் தேர்தல் சமயத்தில் அதிகரித்த கொரோனா பாதிப்பு, கடந்த மே உச்சமடைந்தது. கொரோனாவை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் இரவு 10.30 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். உணவகங்கள் இரவு 9 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் 10 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
Next Story






