என் மலர்
செய்திகள்

கைது
கலசபாக்கம் அருகே சூதாட்ட தகராறில் ஆள் கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் கைது
கலசபாக்கம் அருகே சூதாட்ட தகராறில் ஆள் கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கலசபாக்கம்:
கலசபாக்கம் ஒன்றியம் கடலாடி அடுத்த அரிதாரிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர்கள் காமராஜ் (வயது 26), சிவக்குமார் (51). இவர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதில் காமராஜ் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை அடகு வைத்து அந்த பணத்தையும் சூதாட்டத்தில் தோற்றுவிட்டதாகவும், இதற்கு சிவக்குமார்தான் காரணம் என இரு குடும்பத்தாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் சிவக்குமாரை கடத்தி விட்டதாக அவரது மனைவி வள்ளி கடலாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து கடத்தப்பட்ட சிவக்குமாரை மீட்டு, கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்டதாக காமராஜ் மற்றும் தென்மாதிமங்கலம் கிராமத்தை சேர்ந்த பழனி என்பவரின் மகன் செல்வகுமார் (24) ஆகியோரை கைது செய்துள்ளனர். சிவக்குமாரை அடிதடி வழக்கில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






