என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    குட்கா கடத்தல் கும்பலை சேர்ந்த 3 பேர் கைது

    குட்கா கடத்தல் கும்பலை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பர்கூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் இருந்து வந்த வேனை போலீசார் நிறுத்தியபோது நிற்காமல் சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த கந்திகுப்பம் போலீசார் பின் தொடர்ந்து சென்ற போது அதில் வந்த நபர்கள் வேனை மேல்பூங்குருத்தி வனப்பகுதியில் நிறுத்தி விட்டு தப்பி சென்று விட்டனர். போலீசார் நடத்திய சோதனையில் வேனில் குட்கா கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து வனப்பகுதியில் பதுங்கி இருந்த ராஜஸ்தான் மாநிலம் காஞ்சிபட் பகுதியை சேர்ந்த சோகின் (வயது33), ஹரியானா மாநிலத்தை சேர்ந்த முஸ்தாக் (36), ஜாகுல் (29) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான 4 பேரை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×