என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    விராலிமலை அருகே கார் மோதி வாலிபர் பலி

    விராலிமலை அருகே கார் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விராலிமலை:

    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நல்லபொண்ணம்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் அழகுராஜா (வயது 31). இவர் கடந்த 7-ந் தேதி மாலை தனது மோட்டார் சைக்கிளில் விராலிமலை அருகே மணப்பாறை - விராலிமலை சாலையில் அத்திப்பள்ளம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அழகுராஜா திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×