என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    லாரி டயர்களை திருடிய 3 பேர் கைது

    லாரி டயர்களை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    ஓசூர் பேரண்டப்பள்ளி பகுதியில் வாகனங்கள் தயாரிப்பு நிறுவனத்துக்கு சொந்தமான வாகனம் நிறுத்தும் இடம் உள்ளது. இந்தநிலையில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த லாரிகளின் 10 டயர்கள், வேன்களின் 9 டயர்கள் மற்றும் டிஸ்க்குகள் திருடப்பட்டன. அவற்றின் மதிப்பு ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் ஆகும். இந்த சம்பவம் குறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தியதில், டயர்களை திருடியது திருப்பத்தூர் மாவட்டம் துறிஞ்சிகுப்பத்தை சேர்ந்த முத்துராஜ் (வயது 28), சின்னதுரை (38), திருவண்ணாமலை மாவட்டம் பலக்கானூரை சேர்ந்த மகேந்திரன் (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து, லாரி டயர்களை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×