என் மலர்
செய்திகள்

விபத்து பலி
லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி
லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:
தளி ஜெயந்தி காலனியை சேர்ந்தவர் பிரசன்னா (வயது 29). விவசாயி. சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் மதகொண்டப்பள்ளி-ஓசூர் சாலையில் நாகொண்டப்பள்ளி பக்கமாக சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தபகுதியில் நிறுத்தி இருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பிரசன்னா பலத்த காயம் அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பிரசன்னா இறந்தார். இது குறித்து தளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






