என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    பெரம்பலூர் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

    பெரம்பலூர் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர்-ஆலம்பாடி ரோடு சுமங்கலி நகரை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 50). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவும் மது குடித்து விட்டு வீட்டிற்கு சென்றார். மது குடித்ததினால் ஏற்பட்ட வயிற்று வலியை தாங்க முடியாததால், மனமுடைந்த சக்திவேல் நேற்று அதிகாலை வீட்டில் தான் அணிந்திருந்த வேட்டியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×