search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    புதுவையில் கொரோனா பலி எண்ணிக்கை 1,800 ஆக உயர்வு

    புதுவையில் உயிரிழப்பு 1.48 சதவீதமாகவும், குணமடைவது 97.79 சதவீதமாகவும் உள்ளது.
    புதுச்சேரி:

    புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 521 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 102 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 523 ஆக உயர்ந்துள்ளது.

    தற்போது ஆஸ்பத்திரிகளில் 176 பேர், வீடுகளில் 706 பேர் என 882 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 91 பேர் குணமடைந்தனர்.

    ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்த மூலக்குளம் அன்னை தெரசா நகரை சேர்ந்த 35 வயது வாலிபர் பலியானார். இதன் மூலம் தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,800 ஆக உயர்ந்துள்ளது. புதுவையில் உயிரிழப்பு 1.48 சதவீதமாகவும், குணமடைவது 97.79 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முன் தினம் சுகாதார பணியாளர்கள் 16 பேர், முன்கள பணியாளர் ஒருவர், பொதுமக்கள் 3 ஆயிரத்து 300 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இதுவரை 7 லட்சத்து 31 ஆயிரத்து 370 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
    Next Story
    ×