என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    போளூரில் பாம்பு கடித்து டிரைவர் மரணம்

    போளூரில் பாம்பு கடித்து டிரைவர் மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போளூர்:

    போளூர் பெரியார் சாலையில் வசிப்பவர் மாருதி குமார் (வயது 36). இவர் போளூரை அடுத்த வெண்மணியில் உள்ள தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணியாற்றி வந்தார்.நேற்று முன்தினம் வேலை முடிந்ததும் இரவு 8 மணிக்கு போளூர் செல்வம்பேட்டையில் வசிக்கும் உறவினர் வீட்டுக்கு சென்றார். அப்போது மாருதிகுமாரை பாம்பு கடித்து விட்டது.

    அவரை போளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதும் அவர் மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது வழியிலேயே மாருதிகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து அவரது மனைவி புவனேஸ்வரி போளூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தரணி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளார்.
    Next Story
    ×