என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆரணி அருகே திருட்டு நடந்த வீடு
    X
    ஆரணி அருகே திருட்டு நடந்த வீடு

    ஆரணி அருகே ஆசிரியர் வீடு உள்பட 3 இடங்களில் 86 பவுன் நகை கொள்ளை

    அரசு பள்ளி ஆசிரியர் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்ற கும்பல் 70 பவுன் நகை மற்றும் 1 கிலோ வெள்ளி பொருட்கள் கணினி உபகரணங்கள் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் அவுசிங்போர்டு பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி செல்வி இவர்களுக்கு 3 மகள் உள்ளனர். சேகர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

    3 மகள்களும் திருமணமாகி சென்றதால் செல்வி வீட்டில் தனியாக வசித்து வருகின்றார். இந்நிலையில் செல்வி சென்னையில் உள்ள தன்னுடைய உறவினர் வீட்டிற்கு செல்ல வீட்டை பூட்டி விட்டு சென்றார். இதனை நோட்டமிட்ட திருட்டு கும்பல் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவை உடைத்து அதிலிருந்த 13 பவுன் நகை மற்றும் 20 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடி சென்றனர்.

    மேலும் அதே பகுதியில் அரசு பள்ளி ஆசிரியர் கமலகண்ணன் என்பவரின் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்ற கும்பல் 70 பவுன் நகை மற்றும் 1 கிலோ வெள்ளி பொருட்கள் கணினி உபகரணங்கள் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

    மேலும் அந்த பகுதியில் உள்ள ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பாண்டியன் என்பவருடைய வீட்டிலும் புகுந்து 3 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    3 வீடுகளிலும் சேர்த்து 86 பவுன் நகைகளை திருடி சென்றனர். இதன் மதிப்பு ரூ.30 லட்சமாகும்.

    இந்த கொள்ளை சம்பவம் குறித்து ஆரணி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×