என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருட்டு
    X
    திருட்டு

    நாகரசம்பட்டி அருகே வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் நகை திருட்டு

    நாகரசம்பட்டி அருகே வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காவேரிப்பட்டணம்:

    நாகரசம்பட்டி அருகே உள்ள சின்ன கரடியூரை சேர்ந்தவர் சித்ரா (வயது 32). சம்பவத்தன்று அவர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். அந்த நேரம் மர்ம நபர்கள் கதவை உடைத்து வீட்டிற்குள் சென்று பீரோவில் இருந்த 8 பவுன் தங்க நகைகளை திருடி சென்று விட்டனர். இந்தநிலையில் வீட்டில் நகைகள் திருடப்பட்டிருப்பதை கண்டு சித்ரா அதிர்ச்சி அடைந்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் நாகரசம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×