என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கட்டிடத்தில் பதுக்கி வைக்கப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் - வாலிபர் கைது
Byமாலை மலர்4 Aug 2021 8:32 AM GMT (Updated: 4 Aug 2021 8:32 AM GMT)
பெரம்பலூர் அருகே கட்டிடத்தில் பதுக்கி வைக்கப்பட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், வாலிபரை கைது செய்தனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூரை அடுத்த செட்டிகுளம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி உத்தரவின்பேரில் பாடாலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிக்கந்தர் பாஷா தலைமையில் போலீஸ் குழுவினர் செட்டிகுளத்திற்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் அப்பகுதியில் தெற்கு தெருவில் உள்ள முருகானந்தம் (வயது 31) என்பவருக்கு சொந்தமான பழைய கட்டிடத்தில் அதிரடி சோதனை நடத்தியதில், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அங்கிருந்து சுமார் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான 25 கிலோ குட்கா, பான் மசாலா போன்ற புகையிலை பொருட்களை போலீசார் கைப்பற்றி பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக முருகானந்தம் கைது செய்யப்பட்டார். பின்னர் பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் முருகானந்தம் நேற்று ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பெரம்பலூரை அடுத்த செட்டிகுளம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி உத்தரவின்பேரில் பாடாலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிக்கந்தர் பாஷா தலைமையில் போலீஸ் குழுவினர் செட்டிகுளத்திற்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் அப்பகுதியில் தெற்கு தெருவில் உள்ள முருகானந்தம் (வயது 31) என்பவருக்கு சொந்தமான பழைய கட்டிடத்தில் அதிரடி சோதனை நடத்தியதில், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அங்கிருந்து சுமார் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான 25 கிலோ குட்கா, பான் மசாலா போன்ற புகையிலை பொருட்களை போலீசார் கைப்பற்றி பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக முருகானந்தம் கைது செய்யப்பட்டார். பின்னர் பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் முருகானந்தம் நேற்று ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X