என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா தொற்று காலத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவது மிகவும் இன்றியமையாதது
Byமாலை மலர்4 Aug 2021 2:52 AM GMT (Updated: 4 Aug 2021 2:52 AM GMT)
தாய்ப்பால் எளிதில் ஜீரணிக்கக் கூடியது, தாய்ப்பால் கொடுப்பது நாம் குழந்தைக்கு கொடுக்கும் முதல் தடுப்பூசி ஆகும்.
புதுச்சேரி:
சுகாதாரத்துறை செயலாளர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தாய்ப்பால் வார விழா கடந்த 1-ந் தேதி முதல் வருகிற 7-ந் தேதி வரை புதுச்சேரி ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையிலும், அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களிலும் கொண்டாடப்படுகிறது. குழந்தைக்கு முதல் 6 மாதத்திற்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்.
தாய்ப்பால் எளிதில் ஜீரணிக்கக் கூடியது, தாய்ப்பால் கொடுப்பது நாம் குழந்தைக்கு கொடுக்கும் முதல் தடுப்பூசி ஆகும். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு வளரும்போது உடல்பருமன் நோய், சர்க்கரை நோய், ஒவ்வாமை நோய் போன்றவை ஏற்படுவது மிகக்குறைவு.
குழந்தைக்கு தண்ணீர், சர்க்கரை, தேன், கழுதைப்பால், புட்டிப்பால் கொடுக்க கூடாது. பிறந்த குழந்தைக்கு சீம்பால் கொடுப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். குழந்தையை பல வியாதிகளில் இருந்து பாதுகாக்கிறது. அதனால் குழந்தைக்கு கட்டாயம் சீம்பாலை கொடுக்க வேண்டும்.
தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாய்க்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவுகிறது. மார்பக புற்றுநோய் வரும் வாய்ப்பு குறைகிறது. தாயின் இளமையும், அழகும் பாதுகாக்கப்படுகிறது. கொரோனா தொற்று காலத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவது மிக இன்றியமையாததாகும்.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் உணவில் கீரை, பருப்பு, பால், காய்கறி வகைகளை சாப்பிடுதல் அவசியமாகும். தாய்ப்பால் கொடுக்கும் முன் பால், பழச்சாறு அல்லது நீர் ஆகாரமும் அருந்திவிட்டு தாய்ப்பால் கொடுப்பது தாயின் உடலுக்கு நல்லது. தாய்க்கு மனக்கவலை அல்லது அதிர்ச்சி ஏற்பட்டால் பால் சுரப்பது குறையும். அதனால் தாய்மார்கள் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை செயலாளர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தாய்ப்பால் வார விழா கடந்த 1-ந் தேதி முதல் வருகிற 7-ந் தேதி வரை புதுச்சேரி ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையிலும், அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களிலும் கொண்டாடப்படுகிறது. குழந்தைக்கு முதல் 6 மாதத்திற்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்.
தாய்ப்பால் எளிதில் ஜீரணிக்கக் கூடியது, தாய்ப்பால் கொடுப்பது நாம் குழந்தைக்கு கொடுக்கும் முதல் தடுப்பூசி ஆகும். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு வளரும்போது உடல்பருமன் நோய், சர்க்கரை நோய், ஒவ்வாமை நோய் போன்றவை ஏற்படுவது மிகக்குறைவு.
குழந்தைக்கு தண்ணீர், சர்க்கரை, தேன், கழுதைப்பால், புட்டிப்பால் கொடுக்க கூடாது. பிறந்த குழந்தைக்கு சீம்பால் கொடுப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். குழந்தையை பல வியாதிகளில் இருந்து பாதுகாக்கிறது. அதனால் குழந்தைக்கு கட்டாயம் சீம்பாலை கொடுக்க வேண்டும்.
தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாய்க்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவுகிறது. மார்பக புற்றுநோய் வரும் வாய்ப்பு குறைகிறது. தாயின் இளமையும், அழகும் பாதுகாக்கப்படுகிறது. கொரோனா தொற்று காலத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவது மிக இன்றியமையாததாகும்.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் உணவில் கீரை, பருப்பு, பால், காய்கறி வகைகளை சாப்பிடுதல் அவசியமாகும். தாய்ப்பால் கொடுக்கும் முன் பால், பழச்சாறு அல்லது நீர் ஆகாரமும் அருந்திவிட்டு தாய்ப்பால் கொடுப்பது தாயின் உடலுக்கு நல்லது. தாய்க்கு மனக்கவலை அல்லது அதிர்ச்சி ஏற்பட்டால் பால் சுரப்பது குறையும். அதனால் தாய்மார்கள் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X