என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

    புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலங்குடி:

    ஆலங்குடி பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ஆலங்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குருசாமி தலைமையில், போலீசார் ஆலங்குடி திருவள்ளுவர் சாலையில் உள்ள கடைகளில் சோதனை செய்தனர். அப்போது, திருவள்ளுவர் சாலை அரசமரம் அருகில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடையின் உரிமையாளர் ஆலங்குடி படேல் நகரை சேர்ந்த ஆறுமுகம் (வயது 62) என்பவரை போலீசார் கைது செய்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×