என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    வேதாரண்யம் அருகே கஞ்சா விற்றவர் கைது

    வேதாரண்யம் அருகே கஞ்சா விற்பனை செய்தது தொடர்பாக வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 1.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா வேட்டைகாரனிருப்பு பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே ஒருவர் நின்று கொண்டிருப்பதை பார்த்து அவரை பிடித்து விசாரித்தனர்.

    அதில் அவர் விழுந்தமாவடி கிராமம் தம்பிரான் குடியிருப்பை கார்த்திக் (வயது 27) என்பதும், பையில் மறைத்து வைத்து சிறுசிறு பொட்டலங்களாக கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் கார்த்திக்கை கைது செய்து அவரிடமிருந்து 1. 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×