search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுக
    X
    அதிமுக

    விருதுநகரில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

    ஸ்ரீவில்லிபுத்தூரில் முன்னாள் எம்.எல்.ஏ. சந்திரபிரபா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் முத்தையா மற்றும் கட்சியினர் இதில் பங்கேற்றனர்.
    விருதுநகர்:

    தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றகோரியும், அ.தி.மு.க. மீது காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுவதை கண்டித்தும் விருதுநகரில் இன்று 70 இடங்களில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    திருத்தங்கல்லில் முன்னாள் அமைச்சர்-மாவட்டச் செயலாளர் ராஜேந்திரபாலாஜி தனது வீட்டின் முன்பு பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

    முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராஜவர்மன், எதிர் கோட்டை சுப்பிரமணியன் மற்றும் அ.தி.மு.க.வினர் திரளாக இதில் பங்கேற்றனர்.

    விருதுநகர் மேற்கு மாவட்ட அவைத்தலைவர் எஸ்.ஆர். விஜயகுமரன், மாலைப்பேட்டை தெருவில் உள்ள தனது அலுவலகம் முன்பு கட்சியினருடன் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

    சத்தியரெட்டியபட்டியில் கிழக்கு ஒன்றிய செயலாளர் தர்மலிங்கம், அவரது மனைவி யூனியன் துணைத் தலைவர் முத்துலட்சுமி ஆகியோரும், பெத்தநாச்சி நகரில் யூனியன் தலைவர் சுமதி ராஜசேகர், வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகர் ஆகியோரும், பாவாலி சாலையில் நகரச் செயலாளர் முகமது நயினார், முன்னாள் யூனியன் தலைவர் கலாநிதி ஆகியோரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    விருதுநகரில் 16 இடங்களில் அ.தி.மு.க.வினர் பதாகை ஏந்தி போராட்டம் நடத்தினர்.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் முன்னாள் எம்.எல்.ஏ. சந்திரபிரபா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் முத்தையா மற்றும் கட்சியினர் இதில் பங்கேற்றனர்.

    ராஜபாளையம் நகர அ.தி.மு.க. செயலாளர் ராணா பாஸ்கர்ராஜ் மற்றும் இளம்பெண்கள் பாசறை நகர இணைச் செயலாளர் ஷீலா பாஸ்கரன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் என்.கண்ணன், மாவட்ட மாணவரணி துணை செயலாளர் சசிகுமார் ஆகியோர் தமது இல்லங்களில் கண்டன முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    Next Story
    ×