என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாமல்லபுரத்தில் முககவசம் அணியாத சுற்றுலா பயணிகள் 50 பேருக்கு அபராதம்
Byமாலை மலர்27 July 2021 12:43 PM GMT (Updated: 27 July 2021 12:43 PM GMT)
மாமல்லபுரத்தில் முககவசம் அணியாத சுற்றுலா பயணிகள் 50 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மாமல்லபுரம்:
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் கொரோனா 3-வது அலை பரவாமல் தடுக்கும் வகையில் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உத்தரவின்பேரில், பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அரசின் வழிகாட்டி நெறிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படுகின்றன.
இந்நிலையில் மாமல்லபுரம் கடற்கரை கோவில் புராதன சின்னங்களை கண்டுகளிக்க வந்த சுற்றுலா பயணிகள் பலர் முககவசம் அணியவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து கடற்ரை கோவில் நுழைவு வாயின் பகுதியில் முககவசம் அணியாமல் வந்த 50 சுற்றுலா பயணிகளை மடக்கிய மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாக இயக்குனர் வி.கணேஷ், சுகாதார ஆய்வாளர் ரகுபதி, சுகாதார மேற்பார்வையாளர் தாமோதரன் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் பயணிகள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.200 அபராதம் விதித்தனர். பிறகு பேரூராட்சி சார்பில் அபராதம் விதிக்கப்பட்டவர்களுக்கு முககவசம் வழங்கிய அவர்கள் அதனை அணிந்து பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடித்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X