என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரியலூர் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்26 July 2021 11:41 AM GMT (Updated: 26 July 2021 11:41 AM GMT)
அரியலூர் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் கருவிடைச்சேரி கிராமத்தை சேர்ந்த கணேசனின் மகன் ரமேஷ்(வயது 31). கூலித்தொழிலாளி. இவருக்கு கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு உதயகுமாரி (21) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்று, 8 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் அவ்வப்போது ரமேஷ் மது குடித்துவிட்டு வந்து, உதயகுமாரியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு, உதயகுமாரி கோபித்துக்கொண்டு அதே கிராமத்தில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதையடுத்து அன்று ரமேஷ், உதயகுமாரியின் தாய் வீட்டிற்கு குழந்தையை கொடுக்குமாறு கேட்டு, வாக்குவாதம் செய்துள்ளார். அதற்கு உதயகுமாரி மறுத்ததால், அவர் அங்கிருந்து சென்று விட்டார். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு ரமேசின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அக்கம், பக்கத்தினர் வீட்டின் கதவை திறக்க முயன்றபோது உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு ரமேஷ் தூங்கில் பிணமாக தொங்கினார். அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது. இது பற்றி அவரது குடும்பத்தினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ரமேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X