search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொன்னமராவதியில் புதிய வழித்தடங்களில் பஸ் போக்குவரத்து அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்
    X
    பொன்னமராவதியில் புதிய வழித்தடங்களில் பஸ் போக்குவரத்து அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

    பொன்னமராவதியில் புதிய வழித்தடங்களில் பஸ் போக்குவரத்து - அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

    பொன்னமராவதியில் புதிய வழித்தடங்களுக்கான பஸ்போக்குவரத்தை அமைச்சர் ரகுபதி நேற்று தொடங்கி வைத்தார்.
    பொன்னமராவதி:

    பொன்னமராவதி பஸ்நிலையத்தில் செறிவூட்டப்பட்ட குடிநீர் கருவி அமைக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் ரகுபதி திறந்து வைத்து பேசியதாவது:-

    இப்பகுதியில் ஏற்கனவே நிறுத்தப்பட்ட பஸ்கள் மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். பொன்னமராவதியிலிருந்து இரவு நேரத்தில் மணப்பாறை, குளித்தலை, நாமக்கல் வழியாக சேலம், மேட்டூருக்கு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பொன்னமராவதியிலிருந்து சிவகங்கை, சிங்கம்புணரி, மதுரை வழியாக திருநெல்வேலிக்கு பஸ்கள் இயக்கப்படும். பொன்னமராவதி பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற உள்ளது. பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தவும், நீதிமன்றம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    தொடர்ந்து அவர் புதிய வழித்தடங்களில் அரசு டவுன் பஸ் போக்குவரத்தை தொடங்கி வைத்தார். இந்த பஸ் தினமும் பொன்னமராவதியில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு கொன்னையூர், முலங்குடி, செவலூர் வழியாக நெய்வேலிக்கு 7.40 மணிக்கு சென்றடையும்.

    பின்னர் அங்கு இருந்து புறப்பட்டு குழிபிறை, பனையப்பட்டி, லட்சுமிபுரம் வழியாக திருமயத்திற்கு 8.30 மணிக்கு சென்றடையும். அதன்பின் அங்கு இருந்து புறப்பட்டு கடியாபட்டி, ராயபுரம், தேக்காட்டூர் வழியாக நமணசமுத்திரத்திற்கு காலை 9.45 மணிக்கு சென்றடையும்.

    தொடர்ந்து அங்கு இருந்து புறப்பட்டு தேக்காட்டூர், ராயபுரம், கடியாபட்டி வழியாக திருமயத்திற்கு மதியம் 11.20 மணிக்கு வந்தடையும். பின்னர் அங்கு இருந்து புறப்பட்டு குழிபிறை, செவலூர், மேலமேலநிலை, முலங்குடி வழியாக பொன்னமராவதிக்கு மதியம் 12.20 மணிக்கு வந்தடைகிறது. அதன்பின்அங்கு இருந்து புறப்பட்டு சிங்கம்புணரிக்கு 1.20 மணிக்கு சென்றடைகிறது. பின்னர் அந்த பஸ் மீண்டும் பொன்னமரவதிக்கு மதியம் 2.30மணிக்கு வந்தடைகிறது.

    முன்னதாக அமைச்சர் ரகுபதி பொன்னமராவதி வர்த்தக சங்க திருமண மண்டபத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, ஒன்றியக் குழுத் தலைவர் சுதாஅடைக்கலமணி, ஒன்றிய ஆணையர்கள் வெங்கடேஷ், சதாசிவம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×