என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெரம்பலூர் அருகே பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்25 July 2021 11:35 AM GMT (Updated: 25 July 2021 11:35 AM GMT)
பெரம்பலூர் அருகே பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், சத்திரமனை இந்திரா நகர், அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் குணசேகரன். இவருக்கு செல்வம் என்ற மனைவியும், 2 மகள்களும், விக்னேஷ்குமார் (வயது 21) என்ற ஒரு மகனும் உண்டு. குணசேகரன் ஏற்கனவே இறந்து விட்டதால், செல்வம் விவசாய கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வந்தார். பி.காம் படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்த விக்னேஷ்குமாருக்கு ஏற்கனவே வயிற்று வலி இருந்து வந்ததாகவும், அதற்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என்றும் தெரிகிறது. இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது விக்னேஷ்குமாருக்கு திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டது. வயிற்று வலியை தாங்க முடியாததால் விக்னேஷ்குமார் வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X