என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுவையில் முதியோர் உதவித்தொகை ரூ.500 உயர்த்த கவர்னர் ஒப்புதல்
Byமாலை மலர்24 July 2021 2:56 AM GMT (Updated: 24 July 2021 2:56 AM GMT)
புதுச்சேரி மாநிலத்தில் அரசின் சுகாதாரத்துறை செயலாளர் தலைமையில் மாநில உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு ஏற்படுத்த ஒப்புதல் அளித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று முதியோர் ஓய்வூதியம் பெறும் பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையை ரூ.500 உயர்த்தும் வகையில் முதியோர் ஓய்வூதிய விதிகளை திருத்துவதற்கான அறிவிப்பாணை வெளியிட பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் முன்வரைவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
இதன்மூலம் 55-59 வயதினருக்கு மாதம் ரூ.2 ஆயிரம், 60-79 வயதினருக்கு மாதம் ரூ.2,500, 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மாதம் ரூ.3,500 உதவித்தொகையாக கிடைக்கும்.
புதுச்சேரி மாநிலத்தில் அரசின் சுகாதாரத்துறை செயலாளர் தலைமையில் மாநில உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு ஏற்படுத்த ஒப்புதல் அளித்துள்ளார். இந்த செயல்பாடுகளில் துறை ரீதியாக உதவ இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சிறப்பு மருத்துவர்கள் மற்றும் ஜிப்மர் பேராசிரியர்களை கொண்ட மாநில அளவிலான உறுப்பு மாற்று நிபுணர் குழு அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரி கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று முதியோர் ஓய்வூதியம் பெறும் பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையை ரூ.500 உயர்த்தும் வகையில் முதியோர் ஓய்வூதிய விதிகளை திருத்துவதற்கான அறிவிப்பாணை வெளியிட பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் முன்வரைவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
இதன்மூலம் 55-59 வயதினருக்கு மாதம் ரூ.2 ஆயிரம், 60-79 வயதினருக்கு மாதம் ரூ.2,500, 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மாதம் ரூ.3,500 உதவித்தொகையாக கிடைக்கும்.
புதுச்சேரி மாநிலத்தில் அரசின் சுகாதாரத்துறை செயலாளர் தலைமையில் மாநில உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு ஏற்படுத்த ஒப்புதல் அளித்துள்ளார். இந்த செயல்பாடுகளில் துறை ரீதியாக உதவ இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சிறப்பு மருத்துவர்கள் மற்றும் ஜிப்மர் பேராசிரியர்களை கொண்ட மாநில அளவிலான உறுப்பு மாற்று நிபுணர் குழு அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X