search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
    X
    புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

    புதுவையில் முதியோர் உதவித்தொகை ரூ.500 உயர்த்த கவர்னர் ஒப்புதல்

    புதுச்சேரி மாநிலத்தில் அரசின் சுகாதாரத்துறை செயலாளர் தலைமையில் மாநில உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு ஏற்படுத்த ஒப்புதல் அளித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று முதியோர் ஓய்வூதியம் பெறும் பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையை ரூ.500 உயர்த்தும் வகையில் முதியோர் ஓய்வூதிய விதிகளை திருத்துவதற்கான அறிவிப்பாணை வெளியிட பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் முன்வரைவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

    இதன்மூலம் 55-59 வயதினருக்கு மாதம் ரூ.2 ஆயிரம், 60-79 வயதினருக்கு மாதம் ரூ.2,500, 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மாதம் ரூ.3,500 உதவித்தொகையாக கிடைக்கும்.

    புதுச்சேரி மாநிலத்தில் அரசின் சுகாதாரத்துறை செயலாளர் தலைமையில் மாநில உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு ஏற்படுத்த ஒப்புதல் அளித்துள்ளார். இந்த செயல்பாடுகளில் துறை ரீதியாக உதவ இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சிறப்பு மருத்துவர்கள் மற்றும் ஜிப்மர் பேராசிரியர்களை கொண்ட மாநில அளவிலான உறுப்பு மாற்று நிபுணர் குழு அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×