search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கெலமங்கலம் அருகே நாட்டுத் துப்பாக்கிளை பதுக்கி வைத்திருந்த 7 பேர் கைது

    கெலமங்கலம் அருகே நாட்டுத் துப்பாக்கிளை பதுக்கி வைத்திருந்த 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் பகுதியில் கள்ளத்துப்பாக்கிகள் பயன்பாடு கலாச்சாரம் அதிகரித்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் நேற்று தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி. கிருத்திகா, கெலமங்கலம் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் குழு அமைத்து கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் தீவிரப்படுத்தினர்.

    கெலமங்கலம் வனப் பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் தேடுதல் வேட்டையை முடக்கி விட்டனர். அப்போது லட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் (வயது 47), பேவநத்தம கிராமம் திம்மராயன் (42), காடு லக்க சந்திரம் கிராமம் மாரப்பா (45), இருள பட்டி கிராமம் நாகராஜ் (37), உப்பு பள்ளம் முரளி (25) ,திம்மராயப்பா (50), சங்கரப்பா (60) ஆகியோர் வனவிலங்குகளை வேட்டைக்காக உரிமம் இன்றி நாட்டுத் துப்பாக்கிகள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக அவரை களை கைது செய்த போலீசார் மறைத்து வைத்திருந்த 7 துப்பாக்கிகளை கைப்பற்றினர். விசாரணையில் கெலமங்கலத்தில் பூஜை பொருட்கள் விற்பனை கடை நடத்தி வரும் சீனிவாசன் (45) என்பவர் 7 பேருக்கும் வெடிமருந்து பொருட்கள் மற்றும் கரி மருந்து, பால்ரஸ் குண்டு ரவைகளை சப்ளை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சீனிவாசனை போலீசார் கைது செய்தனர் .

    இந்த பகுதியில் 7 கள்ளத் துப்பாக்கிகள் போலீசார் கைப்பற்றி உள்ள சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

    Next Story
    ×