search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    திருமயம் அருகே ரெயில் மோதி ஒருவர் பலி

    திருமயம் அருகே ரெயில் மோதி ஒருவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருமயம்:

    திருமயம் அருகே உள்ள நமணசமுத்திரம் ரெயில் நிலையம் பகுதியில் நேற்று மாலை திருச்சியில் இருந்து காரைக்குடி சென்ற ரெயிலில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அடிபட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து நமணசமுத்திரம் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இதனைதொடர்ந்து நமணசமுத்திரம் போலீசார், காரைக்குடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ரெயில்வே போலீசார் உடலை கைப்பற்றி, இறந்தவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×