என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜெயங்கொண்டம் அருகே திடீர் மழை: வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி
Byமாலை மலர்18 July 2021 9:39 AM GMT (Updated: 18 July 2021 9:39 AM GMT)
ஜெயங்கொண்டம் அருகே திடீரென பெய்த மழையை தொடர்ந்து, வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை வானில் கருமேகங்கள் திரண்டன. இதைத் தொடர்ந்து திடீரென மழை பெய்யத் தொடங்கியது. இதில் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உட்கோட்டை கிராமப்பகுதியில் சுமார் அரை மணி நேரமாக மழை கொட்டித்தீர்த்தது.
தெருக்களில் சரியான முறையில் வடிகால் வசதி இல்லாததால், வெளியேற வழியின்றி கணுக்கால் அளவிற்கு மழைநீர் தேங்கியது. மேலும் அப்பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகினர்.
அப்பகுதியில் மழைக்காலங்களில் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக தண்ணீர் தேங்கும் நிலை உள்ளதாகவும், இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை சரியான முறையில் நடவடிக்கை இல்லை என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இனிவரும் காலங்களில் அதிகப்படியான மழைப்பொழிவு இருக்கும் என்பதால் தண்ணீர் தேங்கி வீடுகளில் உள்ள சுவர்கள் இடிந்து விழும் அபாய நிலை உள்ளதாகவும், இதனால் வீடுகளில் குழந்தைகளை வைத்துக்கொண்டு மிகவும் அவதிப்படும் நிலை உள்ளதாகவும் வேதனையுடன் தெரிவித்தனர். எனவே இப்பகுதியில் உள்ள தெருக்களில் தண்ணீர் வெளியேறுவதற்கான வடிகால் வசதியை உடனடியாக ஏற்படுத்தித்தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X