என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிப்பு
Byமாலை மலர்15 July 2021 4:10 PM GMT (Updated: 15 July 2021 4:10 PM GMT)
புதுச்சேரியில் கடற்கரை சாலை பகுதியில் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஏற்கனவே அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள தளர்வுகளில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சுற்றுலா தளங்களில் 50 சதவிகித நபர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
* புதுச்சேரிக்குள் நுழைய இ-பாஸ் தேவையில்லை.
ஜூலை 31-ம் தேதி வரை அனுமதிக்கப்படாதவை:-
* சினிமா, தியேட்டர்கள் திறக்க அனுமதியில்லை
* அனைத்து வகையான கூட்டங்களுக்கு அனுமதியில்லை
* இரவு நேர ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அமலில் இருக்கும்
* மாலை 6 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டவை:-
* தனியார் நிறுவனங்கள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படலாம்
* இரவு 9 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டவை:-
* பஸ், ஆட்டோ, டாக்சி, அரசு, தனியார் பொதுபோக்குவரத்து கொரோனா விதிகளை பின்பற்றி செயல்பட அனுமதி
* அனைத்து கடைகள் குளிர்சாதன வசதி இன்றி காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி
* காய்கறி, பழக்கடைகள் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி
* கடற்கரை சாலை பகுதியில் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது கட்டாயம்
* பூங்காக்கள் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி
* உடற்பயிற்சி, யோகா நிறுவனங்கள் 50 சதவிகித நபர்களுடன் செயல்பட அனுமதி
* 50 சதவிகித இருக்கை வசதியுடன் உணவகங்கள் செயல்படலாம்
* டீக்கடைகள், பழச்சாறு கடைகள் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி செயல்பட வேண்டும்
* மதுபான கடைகள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி
கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ள நிகழ்வுகள்:-
* திருமண நிகழ்ச்சிகளில் 100 பேர் பங்கேற்க அனுமதி
* இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளில் 20 பேர் பங்கேற்க அனுமதி
* பார்வையாளர்கள் இன்றி விளையாட்டு போட்டிகள் நடைபெற அனுமதி
* திரைப்பட, டிவி நிகழ்ச்சி சூட்டிங் 100 பேருடன் நடைபெற அனுமதி
குறிப்பிட்ட நேர கட்டுப்பாடு இல்லாத நிகழ்வுகள்:-
* இதர செயல்பாடுகளான அவசர தேவைகளான மருத்துவம், தேர்வு, திருமணம், வேலைவாய்ப்பு நேர்காணல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு எந்த நேர கட்டுப்பாடுகளும் இல்லை
* பொருட்களை கொண்டு செல்லுதல் மற்றும் இ-காமர்ஸ் நடவடிக்கைகளுக்கு எந்த நேர கட்டுப்பாடுகளும் இல்லை
* அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்திற்கு நடவடிக்கைகளுக்கு எந்த நேர கட்டுப்பாடுகளும் இல்லை
* விவசாயம், அரசு அலுவலகங்கள் நடவடிக்கைகளுக்கு எந்த நேர கட்டுப்பாடுகளும் இல்லை
என புதுச்சேரி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்...தமிழகத்தில் 2 நாளில் பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் வெளியீடு?
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X