search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் பெரியகருப்பன்
    X
    அமைச்சர் பெரியகருப்பன்

    செப்.15க்குள் மீதமுள்ள பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் -அமைச்சர் பெரியகருப்பன்

    உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாநில தேர்தல் ஆணையம் செய்து வருவதாக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.
    சென்னை: 

    தமிழகத்தில் செப்டம்பர் 15-ந் தேதிக்குள் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கும் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு மேல் கால அவகாசம் வழங்கமுடியாது என்று நீதிபதிகள் திட்டவட்டமாக கூறிவிட்டனர். இதனையடுத்து உள்ளாட்சி தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது.

    இந்நிலையில், செப்டம்பர் 15ம் தேதிக்குள் மீதமுள்ள பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த நடத்த அரசு தீவிரம் காட்டி வருவதாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார். 

    இதுதொடர்பாக நெல்லையில் பேசிய அவர், உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாநில தேர்தல் ஆணையம் செய்து வருவதாக தெரிவித்தார்.
    Next Story
    ×