என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காக்கும் கரங்கள் மூலம் 10 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்
Byமாலை மலர்15 July 2021 10:44 AM GMT (Updated: 15 July 2021 10:44 AM GMT)
ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறும் பள்ளிக்கூடங்களில் மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் குழந்தை திருமணம், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பொருட்டு, காக்கும் கரங்கள் என்ற குழு தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் தற்போது வரை 10 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளன. 6 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. மேலும் 7 ஏழை குழந்தைகளுக்கு தங்கும் இடவசதி செய்து தரப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறும் பள்ளிக்கூடங்களில் மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தற்போது மாணவ-மாணவிகள் வாட்ஸ்அப், பேஸ்புக் போன்றவற்றில் தகவல்களை பரிமாறுவதும், யூடியூப் பயன்பாடும் அதிகரித்து உள்ளது. இதனால் மாணவ-மாணவிகளுக்கு, சமூக வலைதளங்கள் மூலம் ஏற்படும் இடர்பாடுகள் குறித்தும், இதுகுறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது குறித்தும் தேவையில்லாத, விரும்பத்தகாத தகவல்கள் பெறப்படுவதை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் மாணவ -மாணவிகள் காவலன் எஸ்.ஓ.எஸ். செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளவும், அதன் பயன்பாடு குறித்தும், மாவட்ட போலீஸ் துறை வாட்ஸ்அப் எண் 9655220100 மற்றும் 1098 என்ற சைல்டு லைன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
மேற்கண்ட தகவல் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தின் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் குழந்தை திருமணம், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பொருட்டு, காக்கும் கரங்கள் என்ற குழு தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் தற்போது வரை 10 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளன. 6 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. மேலும் 7 ஏழை குழந்தைகளுக்கு தங்கும் இடவசதி செய்து தரப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறும் பள்ளிக்கூடங்களில் மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தற்போது மாணவ-மாணவிகள் வாட்ஸ்அப், பேஸ்புக் போன்றவற்றில் தகவல்களை பரிமாறுவதும், யூடியூப் பயன்பாடும் அதிகரித்து உள்ளது. இதனால் மாணவ-மாணவிகளுக்கு, சமூக வலைதளங்கள் மூலம் ஏற்படும் இடர்பாடுகள் குறித்தும், இதுகுறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது குறித்தும் தேவையில்லாத, விரும்பத்தகாத தகவல்கள் பெறப்படுவதை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் மாணவ -மாணவிகள் காவலன் எஸ்.ஓ.எஸ். செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளவும், அதன் பயன்பாடு குறித்தும், மாவட்ட போலீஸ் துறை வாட்ஸ்அப் எண் 9655220100 மற்றும் 1098 என்ற சைல்டு லைன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
மேற்கண்ட தகவல் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தின் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X