என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஈரோடு மாநகர் பகுதியில் டெங்கு தடுப்பு பணிகள் தொடக்கம்
Byமாலை மலர்15 July 2021 10:35 AM GMT (Updated: 15 July 2021 10:36 AM GMT)
பருவமழை காலம் தொடங்க உள்ளதால் தேவையான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே சாக்கடைகள் தூர்வாரப்பட்டு, குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன.
ஈரோடு:
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதால் அனைத்து மாவட்டங்களிலும் முன் எச்சரிக்கையாக தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளன. ஈரோடு மாநகராட்சி அலுவலர்கள் கடந்த சில மாதங்களாக கொரோனா தடுப்பு பணியில் கவனம் செலுத்தி வந்தனர். தற்போது தொற்று குறைய தொடங்கி உள்ளதால் மற்ற பணிகளிலும் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை காலம் தொடங்க உள்ளதால் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கி உள்ளனர். ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள 60 வார்டுகளிலும் கடந்த சில நாட்களாக சாக்கடை கால்வாய்கள் சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து நேற்று முதல் டெங்கு தடுப்பு பணி நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு உள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக மாநகராட்சி சார்பில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு ஒவ்வொரு வீடாக சென்று ஆய்வு செய்வார்கள். அதன்படி இந்த ஆண்டு 300 வீட்டுக்கு, ஒரு கொசுப்புழு ஒழிப்பு பணியாளர் நியமிக்கப்பட்டு அந்த நபர் ஒரு நாளைக்கு 50 வீடுகளுக்கு சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
ஆய்வின்போது வீட்டில் எங்கேனும் தண்ணீர் தேங்கி உள்ளதா?, கழிவுநீர் தொட்டி, சுற்றுப்புற பகுதி தூய்மையாக உள்ளதா? என்று பார்வையிடுவார். அப்போது கொசு உற்பத்தியாகும் சூழ்நிலை இருந்தால் அங்கு மருந்து தெளிப்பார்கள். ஒரு நபர் நாள் ஒன்றுக்கு 50 வீடுகள் வீதம் ஒரு வாரத்திற்கு 300 வீடுகளை கண்காணிப்பார்.
இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது:-
பருவமழை காலம் தொடங்க உள்ளதால் தேவையான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே சாக்கடைகள் தூர்வாரப்பட்டு, குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன. இன்று முதல் வீடு வீடாக மாநகராட்சி கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் சென்று ஆய்வு செய்வார்கள். இவர்களுடன் அந்தந்த மண்டல உதவி ஆணையாளர்கள் மற்றும் அதிகாரிகள் உடன் செல்வார்கள்.
முடிந்த அளவுக்கு வீட்டில் தண்ணீர் தேங்கி கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கொசு உற்பத்தியாகும் சூழல் இருக்கும் இடங்களில் மருந்து தெளிக்கப்படும். மேலும் ஈரோடு மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளும் ஒவ்வொரு வார்டு வாரியாக சென்று கள ஆய்வில் ஈடுபடுவார்கள்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதால் அனைத்து மாவட்டங்களிலும் முன் எச்சரிக்கையாக தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளன. ஈரோடு மாநகராட்சி அலுவலர்கள் கடந்த சில மாதங்களாக கொரோனா தடுப்பு பணியில் கவனம் செலுத்தி வந்தனர். தற்போது தொற்று குறைய தொடங்கி உள்ளதால் மற்ற பணிகளிலும் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை காலம் தொடங்க உள்ளதால் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கி உள்ளனர். ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள 60 வார்டுகளிலும் கடந்த சில நாட்களாக சாக்கடை கால்வாய்கள் சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து நேற்று முதல் டெங்கு தடுப்பு பணி நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு உள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக மாநகராட்சி சார்பில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு ஒவ்வொரு வீடாக சென்று ஆய்வு செய்வார்கள். அதன்படி இந்த ஆண்டு 300 வீட்டுக்கு, ஒரு கொசுப்புழு ஒழிப்பு பணியாளர் நியமிக்கப்பட்டு அந்த நபர் ஒரு நாளைக்கு 50 வீடுகளுக்கு சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
ஆய்வின்போது வீட்டில் எங்கேனும் தண்ணீர் தேங்கி உள்ளதா?, கழிவுநீர் தொட்டி, சுற்றுப்புற பகுதி தூய்மையாக உள்ளதா? என்று பார்வையிடுவார். அப்போது கொசு உற்பத்தியாகும் சூழ்நிலை இருந்தால் அங்கு மருந்து தெளிப்பார்கள். ஒரு நபர் நாள் ஒன்றுக்கு 50 வீடுகள் வீதம் ஒரு வாரத்திற்கு 300 வீடுகளை கண்காணிப்பார்.
இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது:-
பருவமழை காலம் தொடங்க உள்ளதால் தேவையான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே சாக்கடைகள் தூர்வாரப்பட்டு, குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன. இன்று முதல் வீடு வீடாக மாநகராட்சி கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் சென்று ஆய்வு செய்வார்கள். இவர்களுடன் அந்தந்த மண்டல உதவி ஆணையாளர்கள் மற்றும் அதிகாரிகள் உடன் செல்வார்கள்.
முடிந்த அளவுக்கு வீட்டில் தண்ணீர் தேங்கி கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கொசு உற்பத்தியாகும் சூழல் இருக்கும் இடங்களில் மருந்து தெளிக்கப்படும். மேலும் ஈரோடு மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளும் ஒவ்வொரு வார்டு வாரியாக சென்று கள ஆய்வில் ஈடுபடுவார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X