என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
மாயம்
சிதம்பரம் அருகே வீட்டை விட்டு சென்ற பட்டதாரி இளம்பெண் மாயம்
By
மாலை மலர்15 July 2021 9:28 AM GMT (Updated: 15 July 2021 9:28 AM GMT)

குறிஞ்சிப்பாடி அருகே வீட்டை விட்டு சென்ற பட்டதாரி இளம்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே தீர்த்தனகிரி ஆயித்துறை பகுதியை சேர்ந்தவர் ரவி. அவரது மகள் சோபா என்கிற ராஜலட்சுமி (26வயது). பி.ஏ. பட்டதாரி. இவர் நேற்று முன்தினம் தனது வீட்டிலிருந்து கடலூர் செல்வதாக கூறிச்சென்றுள்ளார். ஆனால் இதுவரை வீடு திரும்பவில்லை.
இதனையடுத்து ராஜலட்சுமியின் தந்தை தனது மகள் குறித்து உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் விசாரணை செய்தார். ஆனால் எங்கு தேடியும் ராஜலட்சுமி கிடைக்கவில்லை. இதையடுத்து இவரது தந்தை ரவி அளித்த புகாரின் அடிப்படையில் புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். ராஜலட்சுமி எங்கு சென்றார்? என்ன ஆனார்? கடத்தப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
