search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாயம்
    X
    மாயம்

    சிதம்பரம் அருகே வீட்டை விட்டு சென்ற பட்டதாரி இளம்பெண் மாயம்

    குறிஞ்சிப்பாடி அருகே வீட்டை விட்டு சென்ற பட்டதாரி இளம்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே தீர்த்தனகிரி ஆயித்துறை பகுதியை சேர்ந்தவர் ரவி. அவரது மகள் சோபா என்கிற ராஜலட்சுமி (26வயது). பி.ஏ. பட்டதாரி. இவர் நேற்று முன்தினம் தனது வீட்டிலிருந்து கடலூர் செல்வதாக கூறிச்சென்றுள்ளார். ஆனால் இதுவரை வீடு திரும்பவில்லை. 

    இதனையடுத்து ராஜலட்சுமியின் தந்தை தனது மகள் குறித்து உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் விசாரணை செய்தார். ஆனால் எங்கு தேடியும் ராஜலட்சுமி கிடைக்கவில்லை. இதையடுத்து இவரது தந்தை ரவி அளித்த புகாரின் அடிப்படையில் புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். ராஜலட்சுமி எங்கு சென்றார்? என்ன ஆனார்? கடத்தப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    Next Story
    ×