search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை
    X
    மேட்டூர் அணை

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு

    மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

    சேலம்:

    கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.

    இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் கிருஷ்ணராஜசாகர் அணைக்கு வினாடிக்கு 1,618 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 4 ஆயிரத்து 29 கனஅடியாக அதிகரித்தது. கபினி அணைக்கு 4 ஆயிரத்து 192 கனஅடியாக இருந்த நீர்வரத்து 6 ஆயிரத்து 594 கன அடியாக அதிகரித்தது.

    2 அணைகளில் இருந்தும் காவிரியில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வருகிறது.

    மேட்டூர் அணைக்கு நேற்று 2 ஆயிரத்து 17 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 2 ஆயிரத்து 313 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் பாசனத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று 72.71 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 72.43 அடியாக சரிந்தது.

    Next Story
    ×