search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருமானூர் அருகே வீட்டில் பிணமாக கிடந்த பட்டதாரி வாலிபர்: கொலையா? போலீசார் விசாரணை

    திருமானூர் அருகே பட்டதாரி வாலிபர் வீட்டில் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீழப்பழுவூர்:

    அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட குலமாணிக்கம் கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன். இவருடைய மனைவி செந்தில்ராணி. இந்த தம்பதியின் மூத்த மகன் ரஞ்சித்குமார்(வயது 32). சி.ஏ. பட்டதாரி. இவர்கள் வசிக்கும் வீடு அருகே அவர்களுக்கு சொந்தமான மற்றொரு வீடு உள்ளது. இரவில் அந்த வீட்டிற்கு சென்று ரஞ்சித்குமார் தூங்குவது வழக்கம்.அதன்படி நேற்றுமுன்தினம் இரவும் வழக்கம்போல் அந்த வீட்டிற்கு தூங்கச்சென்றார். ேநற்று காலை நீண்ட நேரமாகியும் அவர் எழுந்து வராததால், மற்றொரு வீட்டில் இருந்த அவரது பெற்றோர், அங்கு சென்று பார்த்தனர். அப்போது ரஞ்சித்குமார் மர்மமான முறையில் இறந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த ரஞ்சித்குமாரின் பெற்றோர் கதறி அழுதனர். மேலும் இது பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அரியலூர் உட்கோட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு மதன், வெங்கனூர் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

    சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர் ராஜேந்திரன் தலைமையிலான குழுவினர் வரவழைக்கப்பட்டு, கைரேகைகள், தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

    பின்னர் ரஞ்சித்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் ரஞ்சித்குமார் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது ஏதாவது பிரச்சினையில் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது உடல்நலக்குறைவல் உயிரிழந்தாரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வீட்டில் பட்டதாரி வாலிபர் பிணமாக கிடந்த சம்பவம் குலமாணிக்கம் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×