search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    புதுவையில் கொரோனாவுக்கு முதியவர் பலி

    புதுவை மாநிலத்தில் இதுவரை 1,19,302 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,16,203 பேர் குணமடைந்துள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் நேற்று 6,088 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 

    இதில் 121 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. புதுவையில் 93 பேரும், காரைக்காலில் 18 பேரும், ஏனாமில் 5 பேரும், மாகியில் 5 பேரும் இதில் அடங்குவர். 

    தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 77 பேர் ஜிப்மர் மருத்துவமனையிலும், 51 பேர் கதிர்காமம் கொரோனா மருத்துவமனையிலும், 45 பேர் கோவிட் கேர் சென்டர்களிலும் என 246 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    1,081 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். ஒட்டு மொத்தமாக தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு 1,327 பேர் சிகிச்சையில் உள்ளனர். 177 பேர் குணமடைந்துள்ளனர். 

    இந்த நிலையில் கதிர்காமம் கொரோனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புதுவை சண்முகாபுரத்தை சேர்ந்த 56 வயதுடைய முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,772 ஆக உயர்ந்துள்ளது. 

    புதுவை மாநிலத்தில் இதுவரை 1,19,302 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,16,203 பேர் குணமடைந்துள்ளனர். 

    இத்தகவல்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    Next Story
    ×