என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருத்தங்கல் தி.மு.க. பிரமுகர் ரூ.12 கோடி மோசடி- பெண் அதிபர் புகார்
Byமாலை மலர்13 July 2021 9:44 AM GMT (Updated: 13 July 2021 9:44 AM GMT)
திருத்தங்கலைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகர் மீது ரூ.12 கோடி மோசடி செய்ததாக சென்னை நிதி நிறுவன பெண் அதிபர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
விருதுநகர்:
சென்னை அயனாவரத்தைச் சேர்ந்தவர் அகிலாண்டேஸ்வரி. இவர் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இதன் மூலம் பலருக்கும் கடன் வழங்கி உள்ளார்.
இந்த நிலையில் அகிலாண்டேஸ்வரி, விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரை சந்தித்து ஒரு புகார் கொடுத்தார்.
அதில், சிவகாசியை அடுத்த திருத்தங்கல்லைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகர் என்னிடம் அடிக்கடி பணம் வாங்கி செலுத்துவது வழக்கம். தற்போது ரூ.12 கோடி வரை பாக்கி வைத்துள்ளார்.
இதனை திருப்பி கேட்ட போது பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறார் என குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், தி.மு.க. பிரமுகரை அழைத்து விசாரணை நடத்தினார். இன்று காலையும் அவரிடம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
தி.மு.க. பிரமுகர் ஏற்கனவே அ.தி.மு.க.வில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதியாக இருந்தவர். சமீபத்தில் தி.மு.க.வில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X