search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்-அமைச்சர் ரங்கசாமி
    X
    முதல்-அமைச்சர் ரங்கசாமி

    புதுச்சேரியில் வருகிற 16-ந்தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு

    பள்ளிகள் திறப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.
    புதுச்சேரி: 

    புதுவையில் என்.ஆர். காங்கிரஸ்- பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்- அமைச்சராக ரங்கசாமி கடந்த மே மாதம் 7-ந்தேதி பதவி ஏற்றார். அமைச்சர்கள் கடந்த 27-ந்தேதி பதவி ஏற்றனர். அவர்களுக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    அமைச்சர்கள் பதவி ஏற்று 2 வாரங்கள் ஆகியும் இன்னும் அவர்களுக்கு இலாகா ஒதுக்கப்படாமல் இருந்தது. 

    தமிழிசை சவுந்தரராஜன்

    இந்நிலையில்,  அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட இலாக்காக்கள் தொடர்பான பட்டியலை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து முதல்-அமைச்சர் ரங்கசாமி இன்று வழங்கினார். 

    இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுச்சேரியில் வருகிற 16-ந்தேதி 9 ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவித்தார். 

    கொரோனா பாதிப்பு குறைந்துவரும் நிலையில் பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், கல்லூரிகளும் வருகிற 16-ந்தேதி முதல் திறக்கப்படும் என்றார். மேலும் பள்ளிகள் திறப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார். 

    Next Story
    ×