என் மலர்
செய்திகள்

கைது
சிதம்பரம் அருகே பொதுமக்களை மிரட்டிய ரவுடி கைது
சிதம்பரம் அருகே கையில் பாட்டிலில் பெட்ரோலை வைத்துக்கொண்டு பொதுமக்களை மிரட்டிய ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
சிதம்பரம்:
சிதம்பரம் அருகே கிள்ளை போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது 4 மண்டபம் அருகே உத்தமசோழமங்கலம் பகுதியை சேர்ந்த போண்டா என்கிற ஸ்டாலின் தனது கையில் பாட்டிலில் பெட்ரோலை வைத்துக் கொண்டு பொதுமக்கள் மீது ஊற்றி விடுவேன் என்று அச்சுறுத்தல் விடுத்து இடையூறு செய்து வந்துள்ளார்.
இதனையடுத்து போலீசார் ரவுடி ஸ்டாலினை கைது செய்தனர்.
Next Story






