என் மலர்
செய்திகள்

விபத்து பலி
புதுக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலி
புதுக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மறையப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சோலைமுத்து (வயது42). இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் புதுக்கோட்டையில் இருந்து மறையப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது மாலையீடு பகுதியில் சென்ற போது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயமடைந்த சோலைமுத்து சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இது குறித்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த சோலைமுத்து கூலித்தொழிலாளி என போலீசார் தெரிவித்தனர்.
Next Story






