search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    தூசி அருகே மணல் கடத்திய 3 பேர் கைது

    தூசி அருகே மணல் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தூசி:

    தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தூசி அருகே குன்னவாக்கம் ஆற்றுப்படுகையில் இருந்து 5 மோட்டார் சைக்கிள்களில் ஒழுக்கு வாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் (வயது 29), பெருமாள் (31), அஜித் (22) உள்ளிட்ட 5 பேர் மோட்டார் சைக்கிள்களில் மணல் கடத்தி வந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓடமுயன்றனர்.

    அவர்களில் சதீஷ், பெருமாள், அஜித் ஆகிய 3 பேரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். 5 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
    Next Story
    ×