என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    டாஸ்மாக் கடை ஊழியரை மிரட்டிய 2 பேர் கைது

    டாஸ்மாக் கடை ஊழியரை மிரட்டிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கலவை:

    கலவையை அடுத்த மேல்நேத்தபாக்கம் கிராமம் அருகில் அரசு மதுபானக்கடை உள்ளது. நேற்று மாலை 6.30 மணியளவில் அகரம் கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார், மேல்நெல்லி கிராமத்தைச் சேர்ந்த சரவணன் ஆகியோர் டாஸ்மார்க் கடைக்கு வந்து, அங்கிருந்த ஊழியரிடம் 2 பீர் பாட்டில்களை கடனாக கேட்டுள்ளனர். அதற்கு ஊழியர், காசு இல்லாமல் மதுபாட்டில்கள் கொடுக்க முடியாது, என கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள், டாஸ்மாக் கடை ஊழியரை தகாத வார்த்தைகளால் திட்டி, அங்கு கிடந்த காலி பீர் பாட்டிலை எடுத்து வந்து குத்தி விடுவேன், என மிரட்டி உள்ளனர்.

    இதுகுறித்து டாஸ்மாக் கடை ஊழியர் தினகரன் கலவை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தார்.
    Next Story
    ×