என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    வாலாஜா அருகே வேன் கவிழ்ந்து டிரைவர் பலி

    வாலாஜா அருகே வேன் கவிழ்ந்து டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வாலாஜா:

    ஆந்திர மாநிலம் சித்தூர் பலமனேர் பகுதியைச் சேர்ந்தவர் ராம்ஜி (வயது 36). டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு பலமனேரிலிருந்து சென்னை கோயம்பேடுக்கு வேனில் காய்கறி ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தார்.

    நேற்று அதிகாலை சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வன்னிவேடு பகுதி அருகே வரும் போது தனியார் திருமண மண்டபம் எதிரே நிலைதடுமாறிய வேன் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் ராம்ஜி வேனுக்கு அடியில் சிக்கி கொண்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    சம்பவம் குறித்து வாலாஜா போலீசாருக்கு தகவல் கிடைத்ததன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    இதனையடுத்து ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நிலைய அலுவலர் அரிகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டனர். இதனையடுத்து உடலை வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து போலீசார் மேல்விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×