என் மலர்
செய்திகள்

கார்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை நடந்த காட்சி.
கார்குடி அரசு பள்ளியில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை - ஆதிவாசி குழந்தைகளுக்கு, தலைமை ஆசிரியை அழைப்பு
முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள கார்குடி அரசு பள்ளியில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதில் பயன்பெற ஆதிவாசி குழந்தைகளுக்கு, தலைமை ஆசிரியை அழைப்பு விடுத்து வருகிறார்.
கூடலூர்:
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் பல்வேறு வனச்சரகங்கள் உள்ளது. அவை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்றாலும் கார்குடி, தெப்பக்காடு உள்ளிட்ட பகுதிகளில் ஆதிவாசி மக்கள் மட்டும் வசித்து வருகின்றனர். அவர்களின் குழந்தைகள் கல்வி கற்பதற்காக கார்குடியில் அரசு உண்டு உறைவிட பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 8-ம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடிந்தது. உயர் கல்வி பயில கூடலூருக்கு சென்று வர வேண்டிய நிலை இருந்தது. இதனால் பல்வேறு சிரமங்களை குழந்தைகள் சந்தித்தனர்.
இதைத்தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளுக்கு பிறகு கடந்த 2011-ம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. மேலும் கூடுதல் கட்டிடங்களும் கட்டப்பட்டது. தற்போது அங்கு சுமார் 200 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
அதன்பின்னர் கடந்த மாதம் 1-ந் தேதி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தொடர்ந்து பிளஸ்-1 மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது. இதனால் உயர் கல்விக்காக ஆதிவாசி குழந்தைகள் நீண்ட தூரம் பயணம் செய்யும் நிலைக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது.
இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியை கலாவதி கூறியதாவது:-
உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு மாணவர்கள் நன்கு படித்ததால் தொடர்ந்து 9 ஆண்டுகள் 100 சதவீத தேர்ச்சி கிடைத்தது. தற்போது மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளதால், அதற்கு இதுவரை 28 மாணவர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதுதவிர கூடலூர் பகுதியில் உள்ள தொரப்பள்ளி, புத்தூர் வயல், மசினகுடி, செம்ம நத்தம், மாவனல்லா உள்பட பல்வேறு இடங்களில் வசிக்கும் ஆதிவாசி குழந்தைகளை பள்ளியில் சேர்க்க நேரில் சென்று அழைத்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. மேலும் பள்ளியில் தங்கி படிக்க விடுதி வசதியும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் பல்வேறு வனச்சரகங்கள் உள்ளது. அவை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்றாலும் கார்குடி, தெப்பக்காடு உள்ளிட்ட பகுதிகளில் ஆதிவாசி மக்கள் மட்டும் வசித்து வருகின்றனர். அவர்களின் குழந்தைகள் கல்வி கற்பதற்காக கார்குடியில் அரசு உண்டு உறைவிட பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 8-ம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடிந்தது. உயர் கல்வி பயில கூடலூருக்கு சென்று வர வேண்டிய நிலை இருந்தது. இதனால் பல்வேறு சிரமங்களை குழந்தைகள் சந்தித்தனர்.
இதைத்தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளுக்கு பிறகு கடந்த 2011-ம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. மேலும் கூடுதல் கட்டிடங்களும் கட்டப்பட்டது. தற்போது அங்கு சுமார் 200 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
அதன்பின்னர் கடந்த மாதம் 1-ந் தேதி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தொடர்ந்து பிளஸ்-1 மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது. இதனால் உயர் கல்விக்காக ஆதிவாசி குழந்தைகள் நீண்ட தூரம் பயணம் செய்யும் நிலைக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது.
இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியை கலாவதி கூறியதாவது:-
உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு மாணவர்கள் நன்கு படித்ததால் தொடர்ந்து 9 ஆண்டுகள் 100 சதவீத தேர்ச்சி கிடைத்தது. தற்போது மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளதால், அதற்கு இதுவரை 28 மாணவர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதுதவிர கூடலூர் பகுதியில் உள்ள தொரப்பள்ளி, புத்தூர் வயல், மசினகுடி, செம்ம நத்தம், மாவனல்லா உள்பட பல்வேறு இடங்களில் வசிக்கும் ஆதிவாசி குழந்தைகளை பள்ளியில் சேர்க்க நேரில் சென்று அழைத்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. மேலும் பள்ளியில் தங்கி படிக்க விடுதி வசதியும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






