என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமணம் ஆன 2 நாளில் புதுப்பெண் தற்கொலை
Byமாலை மலர்2 July 2021 2:14 AM GMT (Updated: 2 July 2021 2:14 AM GMT)
கடலூரில் திருமணம் ஆன 2 நாளில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த நத்தமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன். இவருடைய மகள் மணிமேகலை (வயது 27). பி.எஸ்சி. நர்சிங் படித்து முடித்துள்ள இவர் சென்னையில் உள்ள ஒரு கண் கண்ணாடி கடையில் கண் பரிசோதனை செய்யும் பிரிவில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் மணிமேகலைக்கும், பண்ருட்டி அருகே உள்ள மாளிகம்பட்டு கிராமத்தை சேர்ந்த குப்புசாமி என்பவருக்கும் கடந்த 28-ந்தேதி திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் 30-ந்தேதி மணிமேகலை தனது பெற்றோர் வீட்டுக்கு வந்தார். பின்னர் உடை மாற்றி வருவதாக வீட்டில் உள்ள அறைக்கு சென்ற அவர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மணிமேகலைக்கு திருமணமாகி 2 நாட்களே ஆவதால், அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து சிதம்பரம் சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X