search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    மயிலாடுதுறையில் ரெயில் மோதி முதியவர் பலி

    மயிலாடுதுறையில் ரெயில் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை ரெயில் நிலையத்துக்கும், மாப்படுகை ரெயில்வே கேட்டிருக்கும் இடையில் தண்டவாளத்தில் உடலில் காயங்களுடன் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவவடிவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முதியவரின் உடலை மீட்டு கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், பிணமாக கிடந்த முதியவர், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், ரெயில் நிலைய பகுதியில் சுற்றித்திரியும் அவர், நேற்று மதியம் ஒரு மணி அளவில் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி உயிரிழந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் வீரமணி கொடுத்த புகாரின் பேரில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×