என் மலர்
செய்திகள்

கைது
மயிலாடுதுறை அருகே மணல் திருட்டு- 2 பேர் கைது
எரவாஞ்சேரி பகுதியில் மணல் திருடுவதாக பெரம்பூர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை மேற்கொண்டனர்.
குத்தாலம்:
எரவாஞ்சேரி பகுதியில் மணல் திருடுவதாக பெரம்பூர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது எரவாஞ்சேரி சின்ன அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த ஜெயசீலன் (வயது34), பன்னீர்செல்வம் (60) ஆகியோர் வயலில் பொக்லின் மற்றும் டிராக்டர்கள் மூலம் மணலை திருடியது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மணல் அள்ள பயன்படுத்திய 2 டிராக்டர்கள் மற்றும் பொக்லின் எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் ஜெயசீலன், பன்னீர் செல்வம் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






