என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொந்தகையில் மனித எலும்பு கூடு கண்டெடுப்பு
Byமாலை மலர்27 Jun 2021 2:14 PM GMT (Updated: 27 Jun 2021 2:14 PM GMT)
கீழடி அருகே உள்ள கொந்தகை பகுதியிலும் அகழாய்வு பணி நடக்கிறது. இங்கு நான்கு குழிகள் தோண்டப்பட்டு 10 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன.
திருப்புவனம்:
தமிழர்களின் நாகரிகத்தை உலகிற்கு பறை சாற்றும் கீழடியில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. கீழடி அருகே உள்ள கொந்தகை பகுதியிலும் அகழாய்வு பணி நடக்கிறது. இங்கு நான்கு குழிகள் தோண்டப்பட்டு 10 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. அதில் ஒரு முதுமக்கள் தாழி சேதாரமில்லாமல் முழு அமைப்புடன் கிடைத்தது. அதையும் சேர்த்து 2 முதுமக்கள் தாழிகளை ஆய்வு செய்ததில் அதனுள்ளே மனித மண்டை ஓடு, விலா எலும்புகள், மூட்டு எலும்புகள், கை- கால் விரல் எலும்புகள், இரும்பு வாள், கூம்பு வடிவ கிண்ணங்கள், கருப்பு, சிவப்பு பல வண்ணம் கொண்ட மண் சட்டிகள் இருந்தன. மற்ற முதுமக்கள் தாழிகள் இன்னும் ஆய்வு செய்யப்படவில்லை.
இந்த நிலையில் தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்றபோது மனித முழு உருவ எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. இந்த முழு உருவ எலும்புக்கூடு சுமார் 4 அடி நீளம் இருக்கும். இந்த முழு உருவ எலும்புக்கூடு முழுமையான ஆய்வுக்கு பிறகு தான் ஆணா -பெண்ணா எனவும் மேலும் எந்த நூற்றாண்டு காலத்தை சேர்ந்தது எனவும் தெரியவரும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X