என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ஈரோட்டில் பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது

    ஈரோட்டில் பணம் வைத்து சூதாடியது தொடர்பாக 8 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.9 ஆயிரத்து 70ஐ பறிமுதல் செய்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு நாராயண வலசு பகுதியில் உள்ள ஒரு காலி இடத்தில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக, வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசாரை பார்த்ததும் சூதாடிக்கொண்டு இருந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். உடனே போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள், ஈரோடு கைகாட்டிவலசு பகுதியை சேர்ந்த தவமணி (வயது 52), பெரிய வலசு பகுதியை சேர்ந்த பழனியப்பன் (60), மூர்த்தி கவுண்டர் தோட்டம் பகுதியை சேர்ந்த செந்தில் (39), நாராயண வலசு பகுதியை சேர்ந்த ராஜா (53), விவேகானந்தர் சாலை பகுதியை சேர்ந்த மாதேஷ் (36), திருமால் நகர் பகுதியை சேர்ந்த கணேசன் (50), வாஞ்சிநாதன் நகர் பகுதியை சேர்ந்த மணி (50), வெட்டுகாட்டுவலசு மடிக்காரர் காலனி பகுதியை சேர்ந்த சண்முகம் (55) ஆகியோர் என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து 8 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சீட்டுக் கட்டுகள் மற்றும் ரூ.9 ஆயிரத்து 70 பறிமுதல் செய்யப்பட்டன.
    Next Story
    ×