என் மலர்
செய்திகள்

கைது
கெலமங்கலம் அருகே புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
கெலமங்கலம் அருகே புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:
கெலமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் மற்றும் போலீசார் துளசி நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கிருந்த பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற சின்னட்டியை சேர்ந்த பிரகாஷ் (வயது 37) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story






