என் மலர்
செய்திகள்

கொரோனா தடுப்பூசி
வேதாரண்யத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்
வேதாரண்யம் தாலுகாவில் வேதாரண்யம் அரசு மருத்துவமனை, கரியாப்பட்டினம், நாலுவேதபதி, புஷ்பவனம் உள்ளிட்ட இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகாவில் வேதாரண்யம் அரசு மருத்துவமனை, கரியாப்பட்டினம், நாலுவேதபதி, புஷ்பவனம் உள்ளிட்ட இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டு சென்றனர். இந்த முகாமில் 2 ஆயிரத்து 500 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. பல இடங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டதால் பலர் தடுப்பூசி போடாமல் திரும்பி சென்றனர்.தோப்புத்துறையில் சுகாதாரத்துறையினர் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
Next Story






