search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    உடையார்பாளையத்தில் லாரி டிரைவரிடம் செல்போன், பணம் பறித்த 2 பேர் கைது

    உடையார்பாளையத்தில் லாரி டிரைவரிடம் செல்போன், பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உடையார்பாளையம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த கடாரங்கொண்டன் கிராமத்தை சேர்ந்த கெங்காசலத்தின் மகன் வேல்முருகன்(வயது 35). லாரி டிரைவரான இவரும், கிளீனரான அதே பகுதியை சேர்ந்த பிரகாசும் கடந்த 19-ந் தேதி கரூரில் இருந்து லாரியில் ஜல்லிக்கற்கள் ஏற்றி வந்தனர். நள்ளிரவில் அசதியாக இருந்ததால் 2 பேரும் உடையார்பாளையத்தில் லாரியை சாலை ஓரம் நிறுத்தி விட்டு தூங்கியுள்ளனர். அப்போது லாரியை யாரோ தட்டிய சத்தம் கேட்டு எழுந்து பார்த்தபோது 2 மர்மநபர்கள் சேர்ந்து வேல்முருகனின் சட்டை பையில் இருந்த ரூ.2 ஆயிரம் ரொக்கம், செல்போனை பறித்துக்கொண்டு தப்பி சென்றுவிட்டனர். இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில், வேல்முருகன் புகார் அளித்தார். அதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் வழக்குப்பதிந்து தப்பி ஓடிய 2 பேரையும் தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று உடையார்பாளையம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அப்பகுதியில், மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து 2 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தபோது அவர்கள், ஜெயங்கொண்டம் கீழகுடியிருப்பை சேர்ந்த மணிகண்டனின் மகன் அருண்(19) மற்றும் 17 வயது சிறுவன் என்பதும், டிரைவர் வேல்முருகனிடம் செல்போன், பணத்தை பறித்து சென்றது அவர்கள்தான் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Next Story
    ×