என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஈரோட்டில் தூக்குப்போட்டு பிளஸ்-2 மாணவி தற்கொலை
Byமாலை மலர்21 Jun 2021 5:45 PM GMT (Updated: 21 Jun 2021 5:45 PM GMT)
ஈரோட்டில் தூக்குப்போட்டு பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு:
ஈரோடு சூளை எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 45). கூலி தொழிலாளி. இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் திருமணம் ஆகி கணவருடன் வசித்து வருகிறார். 2-வது மகள் சத்யா (17). இவர் பிளஸ்-2 படித்து வந்தார். 3-வது மகள் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
சத்யாவுக்கு கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தது. இதனால் அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் அவர் குணமாகவில்லை.
இந்தநிலையில், நேற்று முன்தினம் சத்யாவுக்கு மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். வீட்டில் சத்யா இல்லாததால் அவரது குடும்பத்தினர் தேடிப்பார்த்தனர். அப்போது, வீட்டின் அருகில் உள்ள ஒரு குடிசை வீட்டில் சத்யா துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவர்கள் சத்யாவை மீட்டு, சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சத்யா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு சூளை எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 45). கூலி தொழிலாளி. இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் திருமணம் ஆகி கணவருடன் வசித்து வருகிறார். 2-வது மகள் சத்யா (17). இவர் பிளஸ்-2 படித்து வந்தார். 3-வது மகள் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
சத்யாவுக்கு கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தது. இதனால் அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் அவர் குணமாகவில்லை.
இந்தநிலையில், நேற்று முன்தினம் சத்யாவுக்கு மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். வீட்டில் சத்யா இல்லாததால் அவரது குடும்பத்தினர் தேடிப்பார்த்தனர். அப்போது, வீட்டின் அருகில் உள்ள ஒரு குடிசை வீட்டில் சத்யா துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவர்கள் சத்யாவை மீட்டு, சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சத்யா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X