என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வேதாரண்யம் அருகே பெண்ணிடம் 4 பவுன் செயின் பறிப்பு
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா தகட்டூரை சேர்ந்தவர் சுந்தரவடிவேலு. இவரது மனைவி சிவஞானம் (வயது 55). சிவஞானம் கொல்லைப்புறம் உள்ள மோட்டாரை போட அதிகாலையில் சென்றபோது மர்ம நபர்கள் அவரது முகத்தில் மிளகாய் பொடியை தூவி அவர் அணிந்திருந்த 4 பவுன் செயினை பறித்து கொண்டு ஓடிவிட்டனர்.
இதுகுறித்து அவரது கணவர் சுந்தரவடிவேல் வாய்மேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது செயினை பறித்து சென்றபோது தாலியும், 2 குண்டும் கீழே விழுந்து கிடந்ததை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடந்த மாதம் இதே பகுதியில் சூரியகாந்தி என்பவரது 8 பவுன் செயினை மிளகாய்ப்பொடி தூவி மர்மநபர்கள் பறித்து சென்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மிளகாய் பொடி வீசி பெண்களிடம் தாலி செயின் பறிப்பு சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்