search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    வேதாரண்யம் அருகே பெண்ணிடம் 4 பவுன் செயின் பறிப்பு

    வேதாரண்யம் அருகே தொடர்ந்து மிளகாய் பொடி வீசி பெண்களிடம் தாலி செயின் பறிக்கப்படும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா தகட்டூரை சேர்ந்தவர் சுந்தரவடிவேலு. இவரது மனைவி சிவஞானம் (வயது 55). சிவஞானம் கொல்லைப்புறம் உள்ள மோட்டாரை போட அதிகாலையில் சென்றபோது மர்ம நபர்கள் அவரது முகத்தில் மிளகாய் பொடியை தூவி அவர் அணிந்திருந்த 4 பவுன் செயினை பறித்து கொண்டு ஓடிவிட்டனர்.

    இதுகுறித்து அவரது கணவர் சுந்தரவடிவேல் வாய்மேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது செயினை பறித்து சென்றபோது தாலியும், 2 குண்டும் கீழே விழுந்து கிடந்ததை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    கடந்த மாதம் இதே பகுதியில் சூரியகாந்தி என்பவரது 8 பவுன் செயினை மிளகாய்ப்பொடி தூவி மர்மநபர்கள் பறித்து சென்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மிளகாய் பொடி வீசி பெண்களிடம் தாலி செயின் பறிப்பு சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×